அந்தக் குரல்கள் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன!
செவ்வாய் நவம்பர் 27, 2018

‘‘அந்த முகங்களை
நான் சுமந்து கொண்டிருக்கிறேன்.
அந்தக் குரல்கள்
எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
அந்தக் காயங்கள்
எனக்குள் வலியெழுப்பிக் கொண்டிருக்கின்றன.
அந்தக் குருதி
என்மீது பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு போதும்
அவர்களை நான் பிரிய விரும்பவில்லை"
-தீபிகா-