ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!
பாஞ்சாலிகளின்
துகிலுரிக்கப்பட்டபோதும் உடன் காத்திட
அந்த பரமகிருஸ்ணரும் கருணை காட்டவில்லை!
மரியாக்களும்
பிலிப்புகளும்
பட்டினியால் மடிந்தபோதும்
அந்த இயேசு பிரானும் இரக்கம் காட்டவில்லை!
கொடூரன் மகிந்தன்
கொலை வெறித்தாண்டவம் ஆடிய போதும்
அந்த புத்த பிரானும் தடுத்திட வரவில்லை!
சிரியாவிலே!
பாத்திமாக்களும்
முகம்மதுக்களும்
கொன்றழிக்கப்பட்டுகொண்டிருக்கும்போதும்
அந்த நபி பெருமானாரும் வருவதாயில்லை!
கடவுளும்
வரவே அஞ்சும்
இது நரக பூமியோ!
அநியாயத்தின் துணை கொண்டு
அழிக்கப்படும் மானுடமே
நீங்கள் இறக்குமுன்னே-
இந்த நரக பூமி
அழிந்து போகட்டும் என்றே
பலமுறை சாபமிட்டே விடை பெறுவீரோ!
புணர்ந்து
பல்கி பெருகி
தனை தானே கொன்று தின்று
அழிந்துபோம்
இதயம் இறந்த இந்த மானுடம்
இது நரக பூமி
இக்கலியுகத்தில்……………………..
-ஈழன்-
செவ்வாய் April 17, 2018
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் April 17, 2018
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
செவ்வாய் April 10, 2018
‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் அனுப்பப்பட உள்ளது.
திங்கள் April 09, 2018
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல்
சனி April 07, 2018
உடல் பருமன் அதிகரிப்பும் ஒரு காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
சனி April 07, 2018
சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து
வியாழன் April 05, 2018
ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு April 01, 2018
திரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன.
ஞாயிறு April 01, 2018
இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும்
சனி March 31, 2018
மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.