பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு விடுக்கும் அறிவித்தல்!

எதிர்வரும் நவம்பர் 27, 2015; இடம்பெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரான்சு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊடகங்கள் வரும் 25.11.2015 புதன்கிழமைக்கு முன்னதாகத் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பதிவுசெய்து எமது அனுமதியைப் பெற்ற ஊடகங்களே மாவீரர் நாள் மண்டபத்தினுள் அனுமதிக்கப்படுவர். அனுமதி பெறாத ஊடகங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முன்கூட்டியே பதிவுகளை மேற்கொள்வதன்மூலம் அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ளமுடியும். தினமும் முற்பகல் 11.00 மணிமுதல் 19.00 மணிவரை எமது அலுவலகத்தில் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நன்றி!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு
தொடர்பு இலக்கம் : 01 43 15 04 21
புதிய முகவரி:
CCTF
116, Rue de Bellville
75020 Paris
Métro ligne 11 : Pyrenées ou Jourdain