யாழில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் பெண் பலி !

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சமுர்த்தி வங்கியின் முகாமையாளரான கோப்பாய் தெற்கைச் சேர்ந்த  52 வயதுடைய கௌரிமலர் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.