நாம் மறக்கக் கூடாத நாள் _ மே _ 18!
செவ்வாய் மே 14, 2019

மே பதினெட்டு
வன்னி நிலத்தின்
முள்ளி வாய்க்காலில்
இன எழுச்சிக்குப்
பின்னடைவு
ஏற்பட்ட நாள்...
தமிழ்
இன வரலாற்றில்
இருள் கவிந்த நாள்.....
தமிழ்ப்
பொது மக்களும்
போராளிகளும்
புத்தன் பேர்
சொல்பவர்களால்
புதை குழிகளில்
தள்ளப்பட்ட நாள்....
விடுதலை கோரிய
வீரத் தமிழர்களை
ஈழத் தமிழர்களை
அடக்கி ஒடுக்கிவிட்டதாகச்
சிங்களக் காடையர்
நம்பத் தொடங்கிய நாள்...
விடுதலைப் புலிகள்
அழிக்கப் பட்டதாக
அறம்கொன்ற சிங்களரால்
அறிவிக்கப்பட்ட நாள்....
வன்னித் தமிழர்க்குப்
பின்னடைவு நேர்ந்ததால்
உண்மைத் தமிழர்கள்
பித்துப்பிடித்து நின்ற நாள்.....
கொழும்பும் தில்லியும்
நினைத்ததை முடித்ததாகக்
கைகுலுக்கிக் கொண்ட நாள்...
மே _ பதினெட்டு
நாம்
மறக்கக் கூடாத நாள்
நமக்கு எதிரானவர்களை
வெற்றி கொள்ளும் வரை...
அறிவரசன்