நாட்டில் ஒரு அசாதாரண நிலைமையை தோற்றுவிப்பதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக புலனாய்வு வலையொளித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையின் இராணுவத்தின் இரகசியக் கணக்கிலிருந்து (Military Secret Fund) தான் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கிடைக்கவில்லை என முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "இப்போது இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களில் மட்டக்களப்பில் இருந்த இராணுவ வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், கைது செய்யப்படவிருக்கிறார்கள்.
கைது செய்யப்படவிருக்கும் இராணுவத்தினர்
அவர்களைக் கைது செய்வதை எப்படியாவது தடுப்பதற்காக நாட்டிற்குள் ஒரு கொந்தளிப்பை (unrest) உருவாக்கப் பார்க்கிறார்கள்.
இந்த அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்று நான் சில மாதங்களுக்கு முன்பே கூறினேன் என்று இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
Beaches& Islands
லண்டனில் இருந்து இயங்கும் தனது அமைப்புக்கு கிடைத்த இரகசிய தகவல்களை கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
இப்போது சிறைச்சாலைகளைச் சுற்றிப் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இன்னும் இரு நாட்களுக்குள் இராணுவ வீரர்களை அரசு தாக்குவதான ஒரு போர்வையிலான எதிர்ப்புகள் கிளம்பவுள்ளன.
அரசாங்கம் இப்போது இதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். கொழும்பு, அநுராதபுரம், கண்டி, குருநாகல் போன்ற முக்கிய நகரங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் அல்லது கொந்தளிப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
இந்த அசம்பாவிதங்களைச் செய்யப் போவது, இராணுவத்தில் கைது செய்யப்படவிருக்கும் நபர்களைக் கைது செய்யாமல் தடுப்பதற்காகவே ஆகும்.
இவர்கள் இராணுவச் சிப்பாய்கள் அல்ல. இவர்கள் இராணுவச் சீருடையைப் போட்டுக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை செய்த, பயங்கரவாதிகள்.
குண்டு வெடிப்பதற்கு களத்தை அமைத்துக் கொடுத்த சுரேஷ் சலேவின் ஆட்களாவர். அத்தோடு பௌத்த பிக்குகளும் களத்தில் இறங்கி போராட தயாராகி வருகின்றனர்.
ஒருவர் இராணுவ வீரராக இருக்கலாம். ஆனால் ஒரு கொலைகாரனால் இராணுவ வீரராக முடியாது. ஒரு இராணுவ வீரர் எந்த நேரத்திலும் ஒரு கொலைகாரனாக மாற முடியும், ஆனால் ஒரு கொலைகாரனால் ஒருபோதும் உண்மையான இராணுவ வீரராக முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரச புலனாய்வுச் சேவையிலிருந்து நிதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space