தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களைத் திருடிய 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, குருதெனிய - மாலிகாதென்ன பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றிலிருந்தே இந்த உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் இப்பகுதியில் இடம்பெற்ற ஏனைய வீடடைப்புத் திருட்டுகளுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேகநபர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space