அநுராதபுரம் - அட்டவீரகொல்லேவ, கோன்கொல்லேவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கைக்குண்டு மற்றும் தோட்டாட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 01 கைக்குண்டு, 52 ரி -56 ரகத் தோட்டாக்கள், 30 - 9MM ரகத் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் அட்டவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டவீரகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர
கைக்குண்டு மற்றும் தோட்டாட்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space