கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 05 அடி 06 அங்குலம், குட்டையான தலைமுடி மற்றும் தாடி வளர்த்துள்ளார் எனவும், கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு நிறச் சட்டை அணிந்துள்ளதாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு துறைமுக கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space