முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு ஒன்றின் சாட்சியாளர் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் 12ஆவது சாட்சியாளர் இன்றையதினம் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், குறித்த சாட்சியாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிதிகளுக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றில் ஆஜராகாத சாட்சியாளருக்கு பிடியாணை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space