தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி தவெக: 109, அதிமுக: 75, திமுக: 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. முன்னிலை நிலவரப்படி அதிமுக 2-ம் இடத்திலும், ஆளும் திமுக 3-ம் இடத்திலும் இருக்கின்றன. திமுகவின் படுதோல்வி நிலவரம் அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலை. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு
தவெக 109, அதிமுக 75, திமுக 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space