நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு.
எதிர்க்கட்சி என்ன சொன்னாலும், நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்துடனேயே உள்ளனர் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஹட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற விசேட நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சமீபத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சி குழப்பத்தில் உள்ளன என்பது தெளிவாகிறது என்றும், அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு வலுவான எதிர்க்கட்சியை நிறுவ தேவையான நடவடிக்கைகளையும்
பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமெனவும் மக்களை மடையர்களாக்கி தன்னை நகைச்சுவை நபர் போல் நிரூபிக்காமல் இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இதன்போது வலியுறுத்தினார்.
மேலும் சபையில் இருப்பவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் ஈடுபட்டவர்களால் எதிர்க்கட்சி இன்று சூழப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டின் மக்கள் குடியரசுத் தலைவருடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் 94.4 வீதம் தொழிலாளர்களே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் தேசிய கல்வி மட்டத்துடன் ஒப்பிடும்போது மலையகப் பகுதியில் கல்வி வளர்ச்சி தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி அடைவு மட்டம் இச்சமூகத்தில் மிகக் குறைவான நிலையிலேயே உள்ளது இதன் காரணமாக 22 கோரிக்கை அடங்கிய முக்கிய செயல்களைச் விரைவில் முன்னெடுப்பது தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம் இதில் ஆசிரியர் பற்றாக்குறை , பாடசாலைகளுக்கான காணி உரிமை மற்றும் தோட்ட புறங்களின் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகள் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் வீதிப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space