முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: தம்பதியினர் காயம்
Ad Space
Ad Space
கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற புகையிரத விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புகையிரதக் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று, புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த தம்பதியினர் காயமடைந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட உடனேயே அப்பகுதி மக்கள் இணைந்து, காரில் சிக்கியிருந்த தம்பதியினரை மீட்டு உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம், புகையிரதக் கடவைகளை கடக்கும் போது பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
Ad Space
Ad Space