பணச்சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, யோஷித்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இது தொடர்பான தீர்ப்பு வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி வெளிப்படுத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித்த ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் கருத்துக்களை முன்வைத்தார்.
அதேவேளை, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார ஆஜராகி கருத்துக்களை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்த அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
யோஷித்த ராஜபக்ஷவின் மனு மீதான தீர்ப்பு ஜூலை 03ஆம் திகதி வெளியாகும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space