கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலுத்தாகொடை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 925 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்கிஸ்சை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருமளவான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space