அநுராதபுரத்துக்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை!

அநுராதபுரத்துக்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

பொருட்களை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ – தலாவ வீதியை மக்கள் பாவனைக்கு விடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.