அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் புதிய அரசாங்க அதிபரால் வழங்கிவைப்பு

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் நீண்ட காலமாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை (21) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொதுமக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது, அரசாங்கத்தால் வழங்கப்படும் காணி ஆவணங்களை பொதுமக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாகவும் பயனாளிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், கணக்காளர் றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திலகராணி கிருபைராசா, நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ். சிவம் மற்றும் கிராம மட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள்  பலர் கலந்துகொண்டனர்.