ஓகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும்.

அத்துடன் ஓகஸ்ட்  18 முதல் 27 வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஓகஸ்ட்  28ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும்.

மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.

அத்துடன், மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.