கால்வாயில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம்!

பிறந்து 4 நாட்களேயானது என நம்பப்படும்  ஆண் சிசுவின் சடலமொன்று களனிமுல்ல பண்டார மாவத்தை பகுதியில்  பொலிஸாரினால் மீடகப்பட்டுள்ளது .

குறித்த சிசுவின் சடலம்  அந்த பகுதியில் காணப்படும் வாய்கால் ஒன்றிலிருந்தே  மீடகப்பட்டதாக முல்லேரியா  பொலிஸார்  தெரிவித்தனர் .

சிசுவின் பெற்றோர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.