கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.