கொழும்பு, வாழைத்தோட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு -12 வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.