செஞ்சோலை படுகொலையில் உயிர்நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி

முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியருக்கும், 4 பணியாளர்களுக்கும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அஞ்சலி செலுத்தினார்.

குறித்த படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்தில் சுடரேற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சமூக ஆர்வலர் அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீசன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.