தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள்  திணைக்களம் இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளது.

இதன்படி, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

கல்விப் பாதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகி டிசம்பர் 21 ஆம் திகதி (வியாழன்) முடிவடையும்.