மட்டக்களப்பில் 78 வயதான வயோதிப பெண்ணை காணவில்லை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு, கருவப்பங்கேணி அம்பிறோஸ் வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய நடராசா கண்மணியம்மா கடந்த ஜூன்  24ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளார்.

இவரை உறவினர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்தபோதும் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 065-2224422 என்ற மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.