மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்த பிரித்தானிய இளைஞர் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்தார்!

எல்ல பிரதேசத்தில் உள்ள மலை உச்சி ஒன்றில்  ஏறிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (13) அதிகாலை  இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த இளைஞருக்கு கடுமையான காயங்கள் ஏற்படாத நிலையில், அவரது கால் உடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், அவர் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எல்ல சுற்றுலா பொலிஸார், முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் அருகில் உள்ள ஹோட்டல்களின் பணியாளர்கள் அடங்கிய குழுவினருடன் இணைந்து பிரித்தானிய சுற்றுலா பயணியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.