முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகள் நியமனம்

வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதிநிதிகள் ஊடாக இலங்கைக்கு முதலீடுகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது சுயதொழில் புரியும் இலங்கையர்களை முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.