மொரட்டுவை விபத்தில் ஐவர் காயம்!

மொரட்டுவை பகுதியில் கெப் வண்டி  பஸ்ஸுடன்    மோதியதில் ஐவர்  காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று  செவ்வாய்கிழமை (18)  காலை எகொட உயன பிரதேசத்தில்  பெலவத்தை நோக்கி பயணித்த  கெப் வண்டியொன்று  டயரை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பஸ்ஸுடன்   மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த ஐவரும் கெப் வண்டியில் பயணித்தவர்களாவர். காயமைடைந்த ஐவரில் ஒருவர் ஆபத்தான  நிலையில்  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.