யாழில் மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில்  54 வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றைய தினம் திருமணச் சடங்கிற்கு சென்றவேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை உறவினரொருவர் இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது குடும்பஸ்தர் நிர்வாணமாக உயிரிழந்த நிலையில், காணப்பட்டதை அவதானித்து பின்னர், அது குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலத்தில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 54வயதான  கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.