யாழில் . மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு

மனித வேலைவாய்ப்புத் திணைக்களம் யாழ்.மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை-2023 நிகழ்வு   சனிக்கிழமை(19.08.2023) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த தொழிற்சந்தை நிகழ்வில் ஆடைத் தொழிற்சாலை, கணக்கியல் துறை, ஹோட்டல் துறை, சந்தைப்படுத்தல் துறை, தாதியர் பயிற்சி நெறி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்கவுள்ளன. எனவே, தொழில் நாடுவோருக்குத் தொழிலொன்றைத் தெரிவு செய்வதற்கான அரிய வாய்ப்பாக இந்த தொழிற்சந்தை நிகழ்வு அமைந்துள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.