யாழில் 12 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சி

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரால் பாலியல் தொல்லைக்குள்ளான 12 வயது சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி தற்கொலை செய்துகொள்ள முயன்றவேளை வீட்டில் உள்ளவர்களால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சிறுமி சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறிய பின்னர், அவருக்கு உளவள சிகிச்சை அளிக்கப்பட்டபோது, தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும், அவர் தவறான தொடுகைகள் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாலும், தான் கடும் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.