ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்கவால்  2023 செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2014ல் மோதரை  மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடும்போது அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக முன்னாள் அமைச்சர் மற்றும் மேலும் இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படடடது குறிப்பிடத்தக்கது.