வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது

பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை  5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவல, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.