விபத்தில் கணவன் மரணம்; மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம் – ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.

நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புவனேஸ்வரன் மனோஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.