11,000 வலி நிவாரணி மாத்திரைகளுடன் மதவாச்சி பிரதேச மருந்தக உரிமையாளர் கைது!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி  மருந்தை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் சுமார் 11,000 வலி நிவாரண மாத்திரைகளுடன் மதவாச்சி பிரதேச மருந்தகம் ஒன்றின்  உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் அநுராதபுரம் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதவாச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உரிம நிபந்தனைகளை மீறி, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.

போதைக்கு அடிமையானவர்கள் இந்த மருந்தை  வாங்குவதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.