சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி வைகோ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்!

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஜெயந்தி நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், தென்சென்னை மேற்கு சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு டி.சி.இராசேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், தூத்துக்குடி தெற்கு புதுக்கோட்டை செல்வம், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் ஜெ,சிக்கந்தர், சிக்கந்தர், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.