ஆண் துணை இல்லாமல் பெண்கள் காரில் செல்லக்கூடாது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியில் காரில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும் கட்டாயம் புர்கா உடை அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.