இந்தோனேஷியாவில் படகு மூழ்கியதால் 15 பேர் பலி, 19 பேரை காணவில்லை

இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவுக்கு அருகில் படகு ஒன்று கவிழ்ந்ததால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர்.

இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப்படகில் 49 பேர் பயணித்தனர் என இந்தோனோஷியாவி;ன் தேடுதல் மற்றும் மீட்பு முகவரம் தெரழிவித்துள்ளது.

இப்படகில் பயணித்த 6 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இப்படகு மூழ்கியமைக்கான காரணம் தெரியவில்லை என மேற்படி முகவரகம் தெரிவித்துள்ளது.

புட்டோன் தீவிலிலுள்ள லன்டோ கிராமத்திலிருந்து சுலாவெசி தீவை நோக்கி சென்றுகொண்டிருந்த படகே இவ்வாறு மூழ்கியுள்ளது எனவும் இம்முகவரகம் தெரிவித்துள்ளது.