இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் ஒரு நேர்மையற்ற மனிதர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இஸ்லாமாபாத் ஐஜி இம்ரான் கானை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.