வடமராட்சி கிழக்கு வலிக்கண்டிப் பகுதியில் பருத்தித்துறை- மருதங்கேணி வீதியில் செவ்வாய்க்கிழமை (23.06.2026) இனம்தெரியாத விஷமிகளால் சம்பு புற்தரைக்கு மீண்டும் தீ வைக்கப்பட்ட நிலையில் கரும் புகை காரணமாகச் சில நிமிடங்கள் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கரும்புகை காரணமாக வீதியால் பயணித்தவர்கள் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் சில நிமிடங்கள் தாமதித்துச்சுயமாகவே தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்துப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பியது.
வடமராட்சி வலிக்கண்டிப் பகுதியில் சம்பு புற்தரைக்கு மீண்டும் தீ வைத்த விஷமிகள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space