இந்திய ஏழு சகோதரிகள்

இந்­தி­யா­வுக்கு அதன் வட ­கி­ழக்கு பிராந்­தியம் மிக முக்­கி­ய­மான ஒரு மூலோ­பாய பிராந்­தி­ய­மாகும். இந்த பிராந்­தியம் ஏழு மாநி­லங்­களை தன்­ன­கத்தே கொண்­டி­ருப்­பதால் இதனை ‘ஏழு சகோ­த­ரிகள் நிலம்’ என்றும் குறிப்­பி­டு­வ­துண்டு. இது சிக்கிம், அஸாம், நாக­லாந்து, மணிப்பூர், மிசோராம், திரி­புரா, மேகா­லயா என ஏழு மாநி­லங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த ஏழு மாநி­லங்­களும் செல்­வ­செ­ழிப்பை கொடுக்­கக்கூ­டிய கனிம வளங்­க­ளையும் சுண்­ணாம்புக் கற்­பா­றை­க­ளையும் அதி­க­மாக கொண்­டுள்ள மலை­களும் மலை சார்ந்த பிர­தே­ச­மு­மாகும்.

இந்த ஏழு மாநி­லங்­களும் இந்­தி­யாவின் பிர­தான பெரு­நி­லப்­ப­ரப்­புடன்  சிலி­குரி எனப்­படும் மிகச் சிறிய ஓர் ‘ஒழுங்கை’ நிலத்தால் இணைக்­கப்­பட்டுள்­ளது. இந்த சிலி­குரி பிர­தேசம் 22 கிலோ­மீற்றர் அக­ல­மான நீண்ட நிலப்­ப­ரப்­பாகும்.  இது திபெத்­திற்கு தெற்­கா­கவும் வங்­காள தேசத்­திற்கு வடக்­கா­கவும்  உள்­ளது.  இத­னூ­டாக ஒரு புகை­யி­ர­தப்­பா­தையும் வீதியும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.நில­வழி தொடர்­புகள் யாவும் இந்த சிறிய ‘ஒழுங்கை’ வழி­யா­கவே இடம்­பெ­று­கி­றது.

இந்த ஏழு மாநி­லங்­களில் நாகா­லாந்தும் மணிப்­பூரும் போராட்டக் குழுக்­க­ளுக்கு நீண்ட ­காலம் பெயர் பெற்­ற­வை­யாக இருந்­துள்­ளன. 1971ஆம் ஆண்­டிற்கு முன்பு, அதா­வது இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் இந்­தி­ரா­காந்தி, கிழக்கு பாகிஸ்தான் (பங்­க­ளாதேஷ்) மீது படை எடுப்­ப­தற்கும் முன்­பாக நாகா போரா­ளி­க­ளுக்கும் மணிப்பூர் போரா­ளி­க­ளுக்கும் கிழக்கு பாகிஸ்தான் ஊடா­கவும் சீனா ஊடா­கவும் பெரும் ஆயுத உத­வி­களும் பண உத­வி­களும் கிடைத்து வந்­தன.

பங்­க­ளாதேஷ் உரு­வான பின்பு இந்த ஆயு­தக்­கு­ழுக்­க­ளுக்­கான உத­விகள் பெரு­ம­ளவில் குறைந்துவிட்­டன என்று குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இந்த வட கி­ழக்கு இந்­திய மாநி­லங்­களை காப்­பாற்றும் வகையில் இந்­திரா காந்­தியின் நட­வ­டிக்­கைகள் இருந்­தன என்­பது இங்கே குறிப்­பிடத்தக்­க­தாகும். இருந்தபோதிலும், மத்­திய பெரு நிலப்­ப­ரப்பில் இருந்து தூரத்தில் இருப்­ப­தாலும் பங்­க­ளாதேஷ் இடையில் இருப்­ப­தாலும்  வட­கி­ழக்கு பிராந்­தியம் புது டெல்­லி­யி­லி­ருந்து அதிக அள­வி­லான கவ­னிப்பை பெற்றுக் கொண்­ட­தில்லை என்­பது இந்த பிராந்­திய மக்­க­ளது பார்­வை­யாகும். இருந்த போதிலும், இன்­னமும் அயல் நாடான மியன்­மாரில் இருந்து தேவை­யான ஆயு­தங்கள் கிடைப்­ப­துடன் மியன்­மா­ரி­லி­ருந்து சட்ட விரோத குடி­யே­றி­களும் தொடர்ச்­சி­யாக இந்­தி­யாவின் எல்­லைக்குள்  வரு­வ­தாக புது­டில்லி குற்றம் சாட்டி வரு­கி­றது.   கட்­டுப்­பா­டுகள் அற்ற எல்லை பிராந்­திய நகர்­வுகள் இங்கே அதி­க­மாக இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­திய சுதந்­தி­ரத்­துக்கு முந்­தைய காலப்­ப­கு­தியில் பிரித்­தா­னிய ஆட்­சி­யா­ளர்­க­ளினால் மேற்கு வங்­கத்தின் ஊடாக அதி­க­ளவு தொடர்­புகள் வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், சுதந்­தி­ரத்தின் பின்பு இந்­தி­யாவின் அனைத்து மாநி­லங்­க­ளிலும் அதி­க­ளவில் கைவி­டப்­பட்ட பிராந்­தி­ய­மாக வட­கி­ழக்கு பிராந்­தியம் அமைந்­துள்­ளது. இதற்கு காரணம் சுதந்­தி­ரத்தின் பின்பு கிழக்கு பாகிஸ்தான் இங்கு பெரும் தடை­யாக இருந்து வந்­தது. இதனால் பல்­வேறு பழங்­குடி இனத்­த­வர்களும் தாம் ஒரு சுதந்­திர தேச­மாக இயங்­கு­வதால் மட்­டுமே விடி­வு­ காலம் ஏற்­படும் என்ற ஒரு எண்­ணப்­பாட்­டி­லேயே இருந்து வந்­துள்­ளனர்.

ஒவ்­வொரு மாநி­லத்­திலும் பல்­வேறு பழங்­குடி குழுக்கள் வாழ்ந்து வரு­கின்­றன. ஒவ்­வொ­ரு­வரும் தமக்கே உரித்­தான மொழி வழக்­கு­க­ளையும் இன சம்­பி­ர­தா­யங்­க­ளையும் கொண்­டுள்­ளனர். அதே­வேளை, பொரு­ளா­தார ரீதி­யாக மிகவும் பிற்­ப­டுத்­தப்­பட்ட வாழ்­கையை வாழ்ந்து வரு­கின்­றனர். இவை எல்­லா­வற்­றிற்கும் மேலாக அவ்­வப்­போது கிடைக்கும் பொரு­ளா­தார உத­வி­களும் கூட உள்ளூர் மாநில அர­சாங்கத்தின்  மற்றும் அரச அதி­கா­ரி­களால் சூறை­யா­டப்­பட்டு விடு­வ­தாக செய்­திகள் கூறு­கின்­றன.

ஏழு மாநி­லங்­களில் நாக­லாந்து போராட்­டங்­க­ளும் புரட்­சி­க­ளுமே அதிக அளவில் பேசப்­பட்ட ஒன்­றாக உள்­ளன. இங்கு குடி­யி­ருக்கும் மக்கள் நாகாக்கள் என அழைக்­கப்­ப­டு­கின்றனர்  நாகாக்­களில் பல்­வேறு பழங்­கு­டிப்­பி­ரி­வினர் உள்­ளனர். இவர்கள் அஸாமின் தெற்­கா­கவும் அரு­ணா­ச­லப்­பி­ர­தே­சத்தின் கீழ்­ப­கு­தி­யிலும் மணிப்­பூரின் மேல் பகு­தி­யி­லு­மாக பரந்து வாழ்­கின்­றனர்.

1918ஆம் ஆண்­டி­லி­ருந்து பிரித்­தா­னியர் ஆட்சி காலத்­தி­லேயே நாகாக்கள் பிரி­வினை கோரி வந்தனர். இந்­திய குடி­ய­ரசுக் கட்­ட­மைப்­பி­லி­ருந்து விடு­ப­டு­வதில் பெரும் ஆர்வம் கொண்டு செயற்­பட்­டனர். அந்த காலப்­ப­கு­தியில் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­துக்­காக இந்­திய அதி­காரி சைம­னிடம் 1929இல் நாகாக்கள் வேண்­டுகோள் விடுத்­தனர். ஆனால் பிற்­கா­லத்தில் சிறப்பு பின்தங்­கிய மாநி­ல­மாக நாக­லாந்து அறி­விக்­கப்பட்­ட­துடன் கிடைக்கப் பெற்ற சிறிய சலு­கை­க­ளுக்கு அர­சியல் தலை­வர்கள் இணங்­கி­யதை தொடர்ந்து நாகலாந்து இந்­தி­யாவில் இணை­வதற்கு உரிய சந்­தர்ப்பம் ஏற்­பட்­டது.

இதே­போல காலா­கா­ல­மாக இடம்­பெற்ற பல்­வேறு ஒப்­பந்­தங்­களும் மித­வாத அர­சி­யல்­வா­தி­களின் மெத்­தனப் போக்­கும் அர­சியல் தலைவர்கள் தமது சொந்த இலா­பங்­களில் அதிக ஆர்வம் கொண்டு செயற்­பட்­ட­மையும் இந்த ஏழு  மாநி­லங்­களின் அர­சி­யலில் பர­வ­லாக காணப்­ப­டு­கின்றன.

கிழக்கு பாகிஸ்தான் வங்­கா­ள­தே­ச­மாக மாற்­றப்பட்­ட ­பின்பு இந்த மாநி­லங்­க­ளுக்கு மேலும் ஒரு சந்­தர்ப்பம் கிடைத்­தது. 1975 நவம்­பரில் சில்லோங் ஒப்­பந்தம் எனும் ஓர் ஒப்­பந்­தத்தின் ஊடாக அனைத்து போராட்டக் குழுக்­க­ளும் ஆயுத களை­வுக்கு ஒப்­புக்­கொண்­டனர்.

ஆனாலும், மித­வா­தி­களால் மீண்டும் துரோ­கத்­திற்கு உள்­ளக்­கப்­பட்­டதன் விளை­வாக தொடர்ந்து போராட்­டங்கள் இடம்­பெற்று வந்­தன. இதன் பின்பு எழுந்த கம்­யூ­னிஸ சித்­தாந்­தங்­களின் பரவல் மேலும் ஆயு­தப்­போ­ராட்­டங்­க­ளையும்  இன அழி­வு­க­ளையும் பாட­மாக கொடுத்­தன.

தற்­பொ­ழுது முற்­றும் ­மு­ழு­தாக சந்­தர்ப்­ப­வாத அர­சி­யலில் உள்ளூர் அர­சியல்வாதிகள் தமக்கு கிடைக்கும் இலாபக்­க­ணக்கை மைய­மாக வைத்தே தமது நட­வ­டிக்­கை­களை கொண்டு நகர்த்­து­வ­தான செய்­திகள் எங்கும் காணக் கூடி­ய­தாக இருக்­கின்றன. மணிப்பூர் விவ­கா­ரங்­களும் இதே அர­சியல் கார­ணங்­களைக் கொண்டே நிகழ்­வதா­க  பார்க்கத் தூண்­டு­கி­றது..

அனைத்து பழங்­கு­டி­யினரின் ஒற்­று­மையை வலியு­றுத்தும் வகையில் இடம்பெற்ற மாண­வர்களின் போராட்­டத்தை சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கல­வ­ர­மாக மாற்­றி­விடக் கூடிய பொறி­முறை ஒன்று கையா­ளப்­பட்டு, பழங்­குடி மக்­களை அவர்­க­ளது கிரா­மங்­களில் இருந்து வெளி­யேற்றி அவர்­க­ளது வணக்­கஸ்­த­லங்கள் தீக்­கிரையாக்கி தற்­கா­லிக கொட்­ட­கை­க­ளுக்கு  அவர்­களை நகர்த்தும் நகர்வே தற்போது நிகழ்ந்­துள்­ள­தாக உள்ளூர் ஆய்­வுகள் கூறுகின்­றன.

உள்ளூர் சட்­ட­ச­பை­களும் அவற்றின் அதி­கா­ரங்­களும் இந்­திய கைத்­தொழில் வர்த்தக அரச திணைக்களங்களும், சுரங்க அகழ்வு திணைக்களம் ஆகியவற்றுடன் இவர்களால்  சான்றிதழ் வழங்கப்பட்ட சர்வதேச சுரங்க அகழ்வு மற்றும் கைத்தொழில் நிறுவனங்களும் பல பில்லியன் இந்திய ரூபா கொண்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திருப்பதன் விளைவாக  ஏற்பட்டுள்ள வன்முறைகளாகவே இவற்றை பார்க்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்ட சில ஆய்வுகள் கூறுகின்றன.

பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்க இடம் இன்றி, தெருக்களிலே அலைந்து திரியும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளன. நூற்றுக்கும் அதிகமான  உயிர்கள் பலியாகி உள்ளன. எங்காவது ஓர் இடத்தில் அமைதியாக வாழவிட்டால் போதும் என்ற நிலைக்கு பழங்குடி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதையும் தமது வாக்கு அரசியலாக அறுவடை செய்வதில் இந்தியக் கட்சிகள் முனைப்பு காட்டி நிற்கின்றன என்பது தான் உண்மையாகும்.

லோகன் பர­ம­சாமி