சிட்னியில் வீடொன்றில் அணுப்பொருட்கள் மீட்பு

சிட்னியில் வீடொன்றில் அணுபொருட்களை அவுஸ்திரேலியாவில் எல்லை காவல்படையினர் மீட்டுள்ளனர்.

 

ஆர்ன்கிளெவில் உள்ள வீடொன்றில் வேறு ஒருசோதனையில் ஈடுபட்டிருந்தவேளை  அணுபொருட்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோன்ஹெஸ்லீ வீதியில் உள்ள தொடர்மாடியொன்றில் அணுபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த பகுதி ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ளது,

பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அவசரசேவை பிரிவினரின்  உத்தரவுகளை  பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என்ற வேண்டுகோளும் வெளியாகியுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிற்கு ஆபத்தில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு அணுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன,எந்த தகவல்காரணமாக சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா போன்ற கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.